Wednesday, December 12, 2012

அமெரிக்க ஜனாதிபதி "மன்மோகன் சிங்"

நம் இந்திய நாட்டின் மௌன குரு,அமைதிப் பெருங்கடல்,அசையா மரம் திரு மான்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் ஒருவேளை அமெரிக்காவோட ஜனாதிபதியா இருந்துருந்தா எப்படி இருக்கும் ??????
(ஒரு வருஷத்துக்கு அவருக்கு கொடுக்குற 40000000$ தண்டமாகி இருக்கும்)

★ அண்டை மாநிலமான பென்சில்வேனியாவிற்கு,நியூயார்க் தண்ணீர் தர மறுப்பு.ஜனாதிபதி தலையிட வேண்டும் என மக்கள் போராட்டம்.

★கத்ரினா சூறாவளியிலும் கூட அமைதி காத்தமைக்கு,அமைதிக்கான விருதுக்கு ஜனாதிபதியின் பெயர் பரிந்துரைப்பு.

★நடந்து முடிந்த 3 விவாதங்களில் மிட் ரோம்னியை தன் அசாத்திய பேச்சுத் திறமையால் திக்குமுக்காடச் செய்தார் மன்மோகன்-Newyork times- jokes

★குடியரசுக்கட்சியுடன் 49 கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளதாகத் தகவல்,அரை சதம் அடிக்க தி.மு.க வை அனுகப்போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

★இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே மீது,அமெரிக்க அரசாங்கம் அபாண்டமாக தொடுத்த வழக்கை வாப்பஸ் பெற்றார்
ம.சிங்.

★அமெரிக்க இரட்டை கோபுரத்தை சாய்த்த தீவிரவாதி பின்லேடன் தனது 71வது வயதை வாஷிங்டன் சிறையில் சுவீட் பகிர்ந்து கொண்டாடினார்.

★அமெரிக்க ஜனாதிபதியின் வருகைக்கு காத்திருக்கும் இந்திய மக்கள்.கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்படும் என இந்தியப் பிரதமர் ஜெயலலிதா உறுதி.(எலே ம.சிங் ஜனாதிபதினா,ஜெ பிரதமர் ஆவுரது தப்பில்ல லே)

★அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இலவசங்களை அறிமுகப்படுத்திய பெருமையைப் பெற்றார் சிங்.

★உலகில் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியலில் சோனியா காந்தி முதல் இடம்,மன்மோகன் இரண்டாம் இடமும் பிடித்தனர்.
(அன்னை இல்லாம இந்தியாவுலியே ஒன்னும் கழட்ட தெரியலயாம்,இதுல அமெரிக்காவுல முடியுமா என்ன)

உங்கள் யோசனைகள் வரவேற்கப்படுகிறது.

Tuesday, December 11, 2012

"மதம்"பிடித்து அலையாதே !!

"எப்படி கட்டுப்பாடோட வாழனும்னு தெரியாதவங்களுக்கும்,தன் மேல நம்பிக்கை இல்லாதவனுக்கும் தான் கடவுள் அப்படின்றவரோட உதவியும்,ஆதரவும் தேவைப்படும்."
இன்னைக்கு செய்தித்தாள்ல படிச்ச ஒரு சின்ன செய்தி,
"ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர்,யோகங்களின் தலைவன் கிருஷ்னன் பிரம்மச்சாரியான அணுமன் இவர்களின் உருவம் பதித்த உடையைத் தன் மார்பகத்தை மறைக்க உபயோகித்ததால் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி, நடிகை குஷ்புவிடம் தெரிவித்துள்ளது"
(மறச்சி இருக்காங்களேனு சந்தோஷப்படுங்கயா)
அவங்க மன்னிப்பு கேப்பாங்களோ மாட்டாங்களோ அது நமக்கு வேண்டாம், மக்களுக்கு நல்லது செய்யனும் கட்சி ஆரம்பிக்குரவனுங்க ஏன் இந்து,கிருத்துவம்,முஸ்லிம்னு மதத்த உள்ள கொண்டு வரிங்க. அதுமட்டும் இல்லாம வெறும் கற்பனை கதாப்பாத்திரங்களான அவர்களுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குரோம்னு ஏன் யோசிக்க மாட்றிங்க.
இந்து மதத்த முழுசா கடைபிடிக்குறவன் இந்தியாவுல பாக்குறது ரொம்ப கஷ்டம்.விநாயகர்,முருகன்,சிவன்,லொட்டு லொஸுக்குனு கும்புட்டாலும் சரி,கர்த்தர்,ஏசு,பரமபிதானு முட்டிப்போட்டு அழுதாலும் சரி, தா செத்தா புழுபுடிச்சி,நாறிப்போய்தான் சாவோம்னு நாம யோசிக்க மறுக்குறோம் அல்லாவ கும்பிடுங்க ஆனா அலவா கும்பிடுங்க.
என் நண்பனுங்க கிட்ட ஏன் நாற்பது நாள் விரதம்,ஏன் நமாஸ் பன்றப்ப சுத்தமா கை,கால் கழுவிட்டு போறிங்கனு கேட்டதுக்கு விஞ்ஞானப்பூர்வமான தகவல் சொன்னது ஏத்துக்குறா மாறி இருந்தாலும் எதுக்காக அத சாதாரனமா பின்பற்றாம அத்தன கட்டுப்பாடுகளையம்,சம்பரதாயங்களையும் உள்ள நொழச்சிருக்கிங்கனு கேட்டா அது சின்ன வயசுல இருந்து பழக்கிட்டாங்கடானு தான் சொல்றானுங்க  ...
பெண்கள் ஆபாசமா ஆண்களையும்,ஆண்கள் ஆபாசமா பெண்களையும் பார்பது முஸ்லிம்களின் மதப்படி தவறு,அப்படிச் செய்பவன் உண்மையான முஸ்லிம் இல்லைனு சொன்னா பாதிக்கு பாதிபேர் வேற மதத்துக்கு தாவ வேண்டியதுதான்.குண்டு போட்டு உயிர பறிக்குற தீவிரவாதியும் நான் முஸ்லிம்,கிருத்துவன்,இந்துனு சொல்றானுங்க,காலைல எழுந்து பட்ட போட்டுக்கிட்டு,நமாஸ் பண்ணிக்கிட்டு,பைபில் படிச்சிகிட்டு இருக்கவனும் அதையேதான் சொல்றானுங்க.அப்பேற்பட்ட ஒன்ன நாம தலைல துாக்கி வச்சிட்டு ஆடுவது அறியாமை,புரியாமை.
மதங்கள் இருப்பது தப்பில்ல,அதுல இருக்க முட்டாள்தனமான விஷயங்கள,முட்டாள்தனமாக பின்பற்றுவது தான் மிகப்பெரிய முட்டாள்தனம். மனுஷனுக்குனு இருக்க 50ல இருந்து 60 வருஷத்துகுள்ள வாழுற  இந்த சின்ன வாழ்கைல தன்னைத்தானே ஏமாத்திக்குறோம்னு தெரிஞ்சே பகுத்தறிவுன்ற ஒன்னுத்த கடைசி வரைக்கும்
உபயோகிக்காம இருந்தால்
இறக்கையை இருந்தும் பறக்க முடியாத,உணவு இருந்தும் உண்ண முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவாய்.