நம் இந்திய நாட்டின் மௌன குரு,அமைதிப் பெருங்கடல்,அசையா மரம் திரு மான்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் ஒருவேளை அமெரிக்காவோட ஜனாதிபதியா இருந்துருந்தா எப்படி இருக்கும் ??????
(ஒரு வருஷத்துக்கு அவருக்கு கொடுக்குற 40000000$ தண்டமாகி இருக்கும்)
★ அண்டை மாநிலமான பென்சில்வேனியாவிற்கு,நியூயார்க் தண்ணீர் தர மறுப்பு.ஜனாதிபதி தலையிட வேண்டும் என மக்கள் போராட்டம்.
★கத்ரினா சூறாவளியிலும் கூட அமைதி காத்தமைக்கு,அமைதிக்கான விருதுக்கு ஜனாதிபதியின் பெயர் பரிந்துரைப்பு.
★நடந்து முடிந்த 3 விவாதங்களில் மிட் ரோம்னியை தன் அசாத்திய பேச்சுத் திறமையால் திக்குமுக்காடச் செய்தார் மன்மோகன்-Newyork times- jokes
★குடியரசுக்கட்சியுடன் 49 கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளதாகத் தகவல்,அரை சதம் அடிக்க தி.மு.க வை அனுகப்போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
★இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே மீது,அமெரிக்க அரசாங்கம் அபாண்டமாக தொடுத்த வழக்கை வாப்பஸ் பெற்றார்
ம.சிங்.
★அமெரிக்க இரட்டை கோபுரத்தை சாய்த்த தீவிரவாதி பின்லேடன் தனது 71வது வயதை வாஷிங்டன் சிறையில் சுவீட் பகிர்ந்து கொண்டாடினார்.
★அமெரிக்க ஜனாதிபதியின் வருகைக்கு காத்திருக்கும் இந்திய மக்கள்.கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்படும் என இந்தியப் பிரதமர் ஜெயலலிதா உறுதி.(எலே ம.சிங் ஜனாதிபதினா,ஜெ பிரதமர் ஆவுரது தப்பில்ல லே)
★அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இலவசங்களை அறிமுகப்படுத்திய பெருமையைப் பெற்றார் சிங்.
★உலகில் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியலில் சோனியா காந்தி முதல் இடம்,மன்மோகன் இரண்டாம் இடமும் பிடித்தனர்.
(அன்னை இல்லாம இந்தியாவுலியே ஒன்னும் கழட்ட தெரியலயாம்,இதுல அமெரிக்காவுல முடியுமா என்ன)
உங்கள் யோசனைகள் வரவேற்கப்படுகிறது.