Thursday, May 28, 2015

சொல்லாக்காதல்

அவிழ்ந்துவிடு மலரே !!
வாடாமல் இருக்க நீரிலேயே நுால் தரித்து தருகிறேன்

மூழ்கவிடு அலையே !!
காலடியில் ஏன் கிடக்கிறாய்,
உன்னுள் மூழ்கிப்போக தவமிருக்கிறேன்.

துள்ளி குதி மீனே !!
தொட்டில் நீச்சல் போதும்,
சமுத்திர நீச்சலிடலாம் வா...

கலைந்துவிடு முகிலே !!
உன் கண் துடைக்க நாதியில்லை,
நீர்த்துளியில் என்னையும் அல்லவா நனைக்கிறாய்..

"ம்" என்று சொல் நிலவே !!
உன்னை மறைக்க நினைக்கும் மேகத்தை கிழித்தெரிகிறேன்.

அன்பே !!
உன் வருகைக்கு காத்திருக்கிறேன்,
பூட்டிய வீட்டை எத்தனை முறைதான் தட்டிக்கொண்டிருப்பாய்..

இந்தா பிடித்துக்கொள்,
கரம் பற்றி தலைசாய்த்து சிரிப்பாயே.ஒரே ஒருமுறை சிரி.
ப்ளூட்டோவிற்கு பயணிக்கும் என்னுடம், உன்னையும் கூட்டிப்போகிறேன் என் சொல்லாக் காதலே...!!