Saturday, September 16, 2017

பரம்பிகுளம்

இது ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் என்பதையே ஒரு மாதம் முன்புதான் தெரிந்துகொண்டேன். வர்க் டென்ஷ்னில் இருந்து மீள , மலை, மழை, மரம், பச்சை, அருவி, ஏரி, குளம், ஈரம் என்று எங்காவது இரண்டு நாள் மொபைல் நெட்வர்க்கே இல்லாத இடத்திற்கு தொலைந்து போய்விடவேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட செக்ஷுவல் அர்ஜுக்கு நிகரான அர்ஜில் இந்த ப்ளான் போடப்பட்டது.
கோயம்பத்தூரில் இருந்து 90 கி.மீட்டரில் உள்ள கேரளத்து மலைக்கிராமம் மற்றும் டைகர் ரிஸர்வ்ட் ஃபாரஸ்ட்தான் இந்த "பரம்பிகுளம்".
பரம்பிகுளத்தில் தங்குவதற்கு சில முன்னேர்ப்பாடுகள் செய்ய வேண்டும். கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் பராமறிக்கப்படும் இந்த காட்டுக்குள் தங்குவதற்கான ரூம் கட்டணங்கள், இடத்திற்கு தகுந்தாற்போல் மாறும். "ஹனிகோம்ப்" ஸ்டே என்ற இடம் இருக்கிறது. இது பரம்பிக்குளத்தின் மலை உச்சியில் இருக்கும் கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் ஸ்டேயிங் PGக்கள். ஒரு அரைக்கு 6100 ரூபாய். வார நாட்களில் இன்னும் விலை குறைவு. மூன்று வேலை உணவும் தந்துவிடுவார்கள். ஏ.சி வசதியும் உண்டு.
"Tree stay" வும் இருக்கிறது. இது ஒரு அழகான ஏரியில் வளர்ந்திருக்கும் இரண்டு மரங்களின் இடுக்கில் கட்டப்பட்டிருக்கும் ஒரு தனித்த வீடு. இந்த அரையில் இரண்டுபேர் மட்டுமே தங்க அனுமதி. ஒன்லி ஃபார் பேர்ஸ்.
மற்றொன்று "Island stay" பரம்பிக்குளம் அணையில் இருக்கும் தீவுக்குள் தங்குவது. 5 பேர் மட்டும் தங்கக்கூடிய அறை. உணவைச் சேர்க்காமல் 10,000 வரை சார்ஜ் செய்கிறார்கள். என்னென்ன திண்ண ஆசையோ, அதை பட்டியலிட்டால் மட்டும் போதும், மூலப் பொருட்களுக்கான விலையை மட்டும் வாங்கிக்கொண்டு சமைத்துத் தருவார்கள்.
நாங்கள் ஹனிகோம்ப் ஸ்டேவில் இரண்டு ரூம்களை 2 வாரம் முன்பே புக்செய்துவிட்டோம்.

வெள்ளிக்கிழமை ஆஃபிஸ் அலுப்பை உதரித்தள்ளிவிட்டு 10 மணியளவில் பெங்களூரி்ல் இருந்து கோயம்பத்தூருக்கு கிளம்பினோம். பேசி வைத்திருந்த வேன் சரியாக 9 மணிக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே சிக்மங்களூருக்கு இப்படித்தான் ப்ளான் போட்டு, படுமோசமாக சொதப்பிவிட்டதால், கொஞ்சம் பயத்தோடுதான் மலை ஏறினோம். பொள்ளாச்சி தாண்டி, மேற்கு தொடர்ச்சி மலையை அடைந்ததுமே காற்றின் குளிர்ச்சி முகத்தில் வீச ஆரம்பித்துவிட்டது.
பரம்பிக்குளம் போகும் முன்பு தமிழகத்தின் பார்டரில் "டாப் ஸ்லிப்" என்று ஓர் இடம் இருக்கிறது. யானை சஃபாரி, மற்றும் ஃபாரஸ்ட் ஜீப் சஃபாரி செய்துகொள்ளலாம். நாங்கள் 1 மணிக்கு பரம்பிக்குளத்தில் இருந்தாக வேண்டும். அங்கு சுற்றுவதற்கே ஏகப்பட்ட இடம் இருப்பதாக ட்ரைவர் லிஸ்ட் போட்டார்.
பரம்பிக்குளத்திற்கு பைக்கில் செல்ல அனுமதி கிடையாது. வெறும் கார் மற்றும் வேன்தான். அதுவதும் தனியாகச் செல்ல அனுமதி இல்லை. வனத்துறையின் வண்டிகள் அல்லது ப்ரைவேட் வண்டிகளாக இருந்தால், "Guard" ஒருவர் நம்முடனேயே கூட வருவார். அவர்தான் பரம்பிக்குளத்தில் சுற்றிப்பார்ப்தற்கு எல்லா இடத்திலும் கூடவே உதவி செய்வார். சிறப்பு என்னவென்றால் அங்குள்ள மலை வாழ் மக்களுக்கு அரசாங்கமே Guard ஆவதற்கான ட்ரெய்னிங்கும், Watcher களுக்கான ட்ரெய்னிங்கும் தந்து தினம் 350 ரூபாய்க்கு பணியில் அமர்த்தியிருக்கிறது.
1.30 மணிக்கு ஒரு வழியாக இடத்தை அடைந்ததுமே இன்ப அதிர்ச்சி, சிக்கன் குழம்புடன் உணவு. மூன்று வேலை உணவு இலவசம் என்று இதுவரை திண்ற இடத்திலெல்லாம் சாம்பார் மஞ்சள் தண்ணீர் மாதிரியும், ரசம் சுடு தண்ணீர் மாதிரியும்தான் இருந்து பார்த்திருக்கிறேன். இங்கு ரசம் ரசம் மாதிரியே இருந்தது, சிக்கன் குழம்பு, சிக்கன் குழம்பு மாதிரியே இருந்தது. கழுத்துவரை தின்றுவிட்டு ஒரு மணிநேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, முதல் ட்ரெக்கிங்கிற்கு கிளம்பினோம். கார்டு முரளி தயாராக இருந்தார். மழை லேசாக தூரல் இட ஆரம்பித்திருந்தது.
ஃபார்மல் ட்ரெக்கர்கள் கிடையாது என்பதால், சாதாரனமாகவே கிளம்பிவிட்டோம். வெறும் ரோட்டோரமே அங்க பாருங்க, இங்க பாருங்க என்று முடித்துவிடுவார் என்று நினைத்தால், முரளி சடாரென்று காட்டுக்குள் புகுந்துவிட்டார். ஒரு ஜான் அளவுள்ள ஒற்றையடிப்பாதைதான். அதுவும் மனிதற்களால் ஏற்படுத்தப்பட்டது கிடையாது. மழைநீர் ஓடி ஓடி அதுவாக உருவாகியிருந்த அடர்ந்த காட்டுப்பாதை. மேலே வானம் கூட தெரியாத அளவிற்கு கரும்பச்சை காட்டுக்குள், ஆயிரக்கணக்கான சில்வண்டுகளின் "கிரீச்" சத்தத்தில் நிறைந்திருக்கும் ஆள் அரவமற்ற இடத்தில், அதுவும் எப்போது வேண்டுமானாலும் காட்டும் பன்றியும், யானைகளும்,புலிகளும், கரடிகளும் எதிரில் வந்து ஹாய் சொல்லும் ஆபத்தான காட்டுவழி ட்ரெக்கிங்க் எக்ஸ்பீரியின் எல்லாம் வேர லெவல்.



5 கி.மீ நடந்து காமராசர் காலத்தில் கட்டப்பட்ட டன்னல் ஏரியாவிற்கு வந்தடைந்தோம். மலையில் ஊற்றெடுத்து வரும் தண்ணீரெல்லாம் அருவியாக விழும் இடத்தில் 1962களிலேயே மிகப்பெரிய டன்னல் அமைக்கப்பட்டு, டேமிக்கு திசைதிருப்பியிருக்கிறார்கள். கேமராக்களுடன் செல்லும் செல்வந்தர்களும், ஃபோட்டு ஃபீரீக்குகளும் இந்த இடத்திலேயே கரடியிடம் கடிபட்டாலும் பரவாயில்லை என்று டேரா போட்டுவிடுவார்கள். மழை வேற ஜோராக அடிக்க ஆரம்பித்துவிட்டது. சில்வண்டுகள் 1000 ல் இருந்து லட்சங்களாக கூட்டு சேர்ந்துவிட்டதுபோல் தோன்றியது. அதிவேகமாக ரூமிற்கு மீண்டும் காட்டுப்பாதை வழியாகவே சென்றோம்.
7 மணிக்கு ட்ரைபல் டேன்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். எதிர்ப்பார்த்த ஹிப்புகளுன் ஒருவரும் இல்லை. எல்லாம் கிழவிகள்தான். ஆனால் டான்ஸ் பார்க்க அன்றைய தினம் பரம்பிக்குளத்தில் ஸ்டே செய்யும் ஃபிகர்கள் எல்லோரும் இங்குதான் வருவார்கள் என்பதால் ஜாலியாக ஸைட் அடிக்கலாம்.
அன்றைய டின்னரை முடித்து தூங்கலாம் என்று படுத்திருந்தால், கூட வந்த நண்பன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலி வலி என்று பீதியைக் கிளப்பிவிட்டான். இந்த அத்த ராத்திரியில், அதுவும் காட்டுக்குள் என்னத்தை செய்வது என்று சமையல் செய்பவர்களிடும் உதவி கேட்டோம். அவ்வளவு பதட்டத்துடன் தடால் புடால் என்று போன் கால்கள் பறந்து, வண்டியை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். எதிர்ப்பார்க்காத பலதுகளை வைத்திருக்கிறது பரம்பிக்குலளம் என்று ஆச்சர்யப்பட்டோம்.
அடுத்தநாள் 6.30 மணிக்கொல்லாம் முரளி வந்துவிட்டார். இன்னொரு ட்ரெக்கிங், Parambikulam dam பார்ப்பதற்காக கிளம்பிவிட்டோம். அதுமுடிந்ததும் ஒரு "போட் ரைட்", பின்னர் காலை உணவை முடித்துவிட்டு பெட்டி படுக்கையுடம் 450 வருடம் பழைமையாக தேக்கு மரத்தை பார்ப்பதற்காக மீண்டும் ஜங்கல் சஃபாரி. இத்தனையும் 6100 ரூபாய்க்குள்ளேயே அடங்கும். மேற்கொண்டு எந்த செலவும் நீங்கள் செய்யவேண்டியதில்லை.

எல்லாவற்றையும் முடித்துவிட்டு 12.30க்கு பரம்பிகுலத்தில் இருந்து இறங்கினோம். முரளியிடம் வேறு எங்காவது ட்ரெக்கிங் போலாமா என்று கேட்டதற்கு. 10 கி.மீ ட்ரெக்கிங் ஒன்று இருப்பதாகச் சொன்னார். அதற்கு 5 நபர்களுக்கு 1200 ரூபாய். முன்பு சென்ற காட்டைவிட படுபயங்கரமான காடு என்றார்.
1 மணிக்கு ட்ரெக்கிங்கை தொடங்கினோம். தொடக்கத்தில் எள்ளலும் ஏசலும், கிண்டலும் கேலியுமாகத்தான் இருந்தோம். காட்டுக்குள் செல்லச் செல்லச் பயம் பீடித்துக்கொண்டது. அதுவும் ஆள் உயர கரடி ஒன்று கண் முன் வந்து போனதும், ஒன்னுக்கு வர ஆரம்பிவிட்டது. நல்லவேலயாக கரடி பயந்துபோனதால் தப்பித்தோம். பின்னர் முரளி சொன்னார். அந்தக் காட்டில் 120 Leopardகள், 29 புளிகள், நிறைய யானைகள், கொஞ்சம் கரடிகள் இருப்பதாக. அதற்குபின் கப் சிப் என்று காட்டைக் கடந்தோம். கண்டிப்பாக எல்லா அனுபவத்தையும் வார்த்தையால் சொல்லிவிடமுடியாது.
அங்கிருந்து 4 மணிக்கு கிளம்பி, டீ, ஸ்னாக்ஸ், டின்னரை முடித்து 8 மணிக்கு பெங்களூருக்கு கிளம்பிவிட்டொம். இரண்டு நாள் ட்ரிப்புக்கு ஏற்ற இடம். அதுவும் மேற்கு தொடர்ச்சி மலையின் மழைக்காலத்தில் செல்வதே உகந்த நேரம்.
இதுவரை தாய் தந்தையரையோ, காதலியையோ, மனைவியையோ எங்குமே வெளியில் கூட்டிச்சென்றதில்லை என்று நினைப்பவர்கள் இருந்தால் கண்டிப்பாக பரம்பிகுளத்திற்கு ப்ளானைப் போடுங்கள். ஆவ்சமாக இருக்கும்.

https://parambikulam.org/

No comments:

Post a Comment