உங்கள் வாழ்க்கையை கடந்துபோகும் ஒவ்வொருவரும்,
உங்களை ஓவியங்களாக வரைந்துகொண்டிரு
க்கிறார்கள்.
நீங்கள் பேசும்
வார்த்தைகளை வண்ணங்களாகவும்,
பார்க்கும் பார்வைகளை கோடுகளாகவும், உதவும் உதவிகளை வளைவுகளாகவும், சித்தரித்துக்கொ
ண்டிருக்கிறார்கள். ஓவியத்திற்கான குணாதிசயத்தை வெளிப்படுத்த,
மீசையையும், உடையையும், சிரிப்பையும், முக பாவனைகளையும்
அதில் லாவகமாக தினித்துவிடுகிற
ார்கள்.
பின்னர் அவைகளுக்கு
உங்கள் பெயரை வைத்துவிடுகிறார்கள்.
அன்புடன் அழைக்கும் உங்கள் பெயரின் பிம்பம்,
நீங்கள் கண்ணாடியில் பார்க்கும் பிம்பமென நினைத்து சிரிப்பீர்கள்.
உண்மையில் அவைகள் அதுவாகவே இருப்பதில்லை. இன்னும் வண்ணங்கள் தீட்டப்படாத கோட்டோவியமாக நீங்கள் உதாசினப்படுத்தப்பட்டிருக்கலாம். உங்கள் முகங்களை
அவர்கள் அகோரமாக வரைந்திருக்கலாம்
அல்லது
வெறுப்பில் சிதைத்திருக்கலாம். வரையப்படாத வெள்ளை காகிதத்தின் பெயர்களாகவும் இருந்திருக்கலாம்.
நீங்கள் இனி ஜாக்கிரதையாக திரும்ப வேண்டும்.
உங்கள் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை நீட்டியபடி,
உங்களை அன்புடன் அழைக்கும் கொலைகாரர்கள் உங்களுடனேயே இருக்கிறார்கள்.
என்னை பயம் சூழ்ந்துகொள்ளும் கனத்தில்,
ஒரு இருட்டு அரையில்,
என் ஆடியின் கருப்பு பிம்பத்தை பார்த்தபடி என்னை நானே பெயரிட்டு அழைத்துக்கொள்ளும்போதும்....
உன் குரல் !!!