காலொடிந்த நாற்காலி ஒன்று அழுதுகொண்டே இருக்கிறது,
ஸ்டோர் ரூமின் ஜன்னல் வழியே, கால்களே இல்லாத ஏதோ ஒன்றை கயிற்றில் தொங்கவிடப்பட்டிருப்பதை அது விசித்திரமாக பார்க்கிறது.
அதனை துடைப்பதற்கு கூட யாருமே இல்லை,
முன்பு ஒரு காலத்தில் அதற்காக இடப்பட்ட பெயர் ஒன்றை நினைவிலிருந்து மீட்டுக்கொண்டிருக்கிறது.
ஏன் ஒருவர்கூட அதன் காலை சரிசெய்ய முயற்சி எடுக்கவேயில்லை என்பதை நினைத்து நினைத்து குமுறுகிறது,
காற்றில் அவ்வப்போது சுற்றி சுற்றி விளையாடும் ஊஞ்சலின் மீதான கோபம் மட்டும் பெருகிக்கொண்டே இருக்கிறது.
ஒரு திடீர் இரவில், பூனை ஒன்று அதன் மீது உறங்க எத்தனித்தது,
வலிதாங்க முடியாமல் "கீச்"சென சத்தமிடவே,
மீண்டும் அனாதையானது...
காலொடிந்த நாற்காலி.