சுஜாதாவின் சிறுகதைகளை முதன்முறையாக படிக்கிறேன். புத்தகத்தின் மூலம் ஒரு ஆசிரியர் நம்மிடம் பேச முடியுமா என்ற கேள்விகள் எழுந்தால் , இந்த புத்தகத்தை படிக்கலாம். "Sudden fiction" என்ற கான்சப்டை தெள்ளத்தெளிவாக கூறி, இரண்டு வார்த்தைக் கதை, 55 வார்த்தைகளுடன் கதை என்று வெவ்வேறு கான்ஸெப்டுகளை உட்புகுத்தி, புத்தகம் முழுதும் நம்முடனே இருக்கிறார்.
புரியாத சில சிறுகதைகளிலின் முடிவில், "இது புரியவில்லையென்றால் Sudden fiction கான்ஸெப்டுக்கு நீங்கள் தகுதியானவரல்ல" என்ற வாத்தைகளின் மூலம், மீண்டும் படிக்கவைத்து புரியவைப்பது இவரின் சிறப்பு.
இரண்டு வார்த்தையில் கதையா ??.
எப்படி சாத்தியம் ?.
சாம்பில் கதைகளை பார்ப்போம்.
1. தலைப்பு : 2089ல் குழந்தை ஒன்று.
கதை : தங்கச்சினா என்னம்மா ??
2. தலைப்பு : கார்கில் வீரனொருவன் கிராமத்து நண்பர்களை சந்திக்கும்போது.
கதை : ரம் கொண்டாந்தியாடா ?
இரண்டு வார்த்தை கதைகளில் உள்ள சுவாரஸ்யமே, நாமாக கதையை உருவாக்கிக்கொள்வதன் சுதந்திரம்தான். இதனிடையில் தபாலட்டை கதைகள் என்று ஒரு யுத்தியை அறிமுகப்படுத்தியிருந்தார். அதாவது உங்களிடம் ஒரு பேனாவும், தபால் அட்டையும் மட்டும் இருந்தால் வார்த்தைகளை தேய்து, சேர்த்து, சுருக்கி எழுதும் ஒரு டெக்னிக்.எடுத்துக்காட்டாக ஒரு கதையைப் பார்ப்போம்.
"அவன் அந்த கம்பியைத்தாண்டி குதித்தான். யாரும் அவனை பார்க்கவில்லை, மறைந்து உட்கார ஏதுவான இடம். சேட்டு தந்த கம்பளி குளிருக்கு கண்டிப்பாக உதவும், மதியம் சாப்பிட்ட கோவில் புளியோதரை பேஷ், சில்லென வீசும் தென்றல் காற்றை கைநீட்டி ரசித்து, "சொர்க வாழ்க்க டா" என்கிறான் பிச்சைக்காரன்" என்று முடியும்.
இது வெறும் சாம்பில்களே. புத்தகத்தில் சிறுகதைகளோடு பேசவும், சிந்திக்கவும் வைத்து நம்முடனே பக்கத்தையும் திருப்பிக்கொண்டு இருப்பார் சுஜாதா. படிக்கத்தகுந்த புத்தகம்.