கடற்கரைக்கு செல்வது வழக்கம்,
கருமேகத்தை இழுத்து வரும் காற்றின் சத்தம் கேட்டது,
கரையை அடைய போட்டியிடும் அலைகளின் சத்தம் கேட்டது,
குமுறுக்கொண்டே வரும் மேகத்தின் சத்தமும் கேட்டது,
சரி சுண்டல் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது,
பக்கத்திலேயே ஒரு பெண்ணின் குரல் ,
பழக்கப்பட்ட குரல், வெகுநாட்கள் பழகிய குரல்,
ஏதோ ஒன்று என்னை கவனிக்கவிடாமல் செய்தது,
அவளே கவனிக்கட்டும் என்று சத்தமிட்டு கடைக்காரனை சுண்டல் கேட்கிறேன்,
சற்றும் கவனிக்காதவளைப்போல் சென்றுவிட்டால்...
ஒரே மழை அடிக்க ஆரம்பித்துவிட்டது,
நானும் வீடு திரும்பிவிட்டேன்.
ஏன் மழையில் மண்வாசனை நம்மை மகிழ்ச்சியடைய வைக்கிறது என்று நான் யோசித்ததேயில்லை ??
சிலவற்றை ரசிப்பதோடு நிருத்திக்கொள்வதுதான் சுகம் என்று உணர்ந்தேன்.