அன்பே
முழுமையான விலகுதலுக்கு
இன்னும் என்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளவில்லை
எனக்கு சில
காரணங்களும், காலங்களும்
தேவையாக இருக்கிறது.
என் காதலை இதுவரை உன்னிடம்
சொன்னதே இல்லாத பட்சத்தில்
"ஏன் இந்த
தடாலடி முடிவு ?"
புறநானுாறையும், சிலப்பதிகாரத்தையும் மொபைல் ஆப்பில் பார்த்து
என்னை பழமென்று நினைத்துவிட்டாயா ?
எனக்கு வில்லியம் ஹாம்சையும்
அர்த்தர் ஸ்கோஃபன்ஹியரையும்
கூட தெரியும்.
ஆடம்பர உடைகள் மட்டும்தானே
பிடிக்காதென்றேன்,
கண்களையும், பற்களையும்
கண்ணக்குழியையும் அல்லவே !!
சொல்லாமல்
காதல் செய்ய
கற்றுக்கொடுத்து
இப்படி பாதியில் விலகுவது
சரிதானா ?
சரி
வருத்தம் கொள்ளாமல்
விலகுவது எப்படி என்பதையாவது
விளக்கிவிட்டு போ...
ஆலிங்கனம் செய்து,
கண்ணீர் சிந்தி,
விரல் நுனிவரை விடைதரும்
சம்பிரதாயங்களை
தினம் தினம்
நான் கனவில் நடத்திக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment