Monday, September 19, 2016

இந்த மரணத்தை...

இந்த கவிதைகளை
ஒரு தீப்பந்தத்தைப் போல
கையிலேந்தியபடிதான்
ஒவ்வொரு மயானத்தையும்
தனிமையில் கடந்துவருகிறேன்.

கழுகின்காலில் சிக்கித்துடித்து
தப்பி விழும் பாம்பைபோல
மரணம் தப்பி மரணிக்கிறேன்
வாழ்ந்தே தீரவேண்டும் என்று...

No comments:

Post a Comment