Monday, February 13, 2017

செய்மோஃபோபியா

எனக்கு செய்மோஃபோபியா.
2012 ஏப்ரல் மாத நிலநடுகத்திலிருந்து என்னுடன் ஒட்டிக்கொண்டது.
கொஞ்சம் அதிர்வுகளை உணர்ந்தாலும் பதட்டத்துடன் ஒளிந்துகொள்ளத் தோதுவான இடத்தை நோட்டம்விட தொடங்கிவிடுவேன். தூக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி மூச்சிறைத்து விழித்த எண்ணற்ற நாட்களில் கட்டலின் இருப்பிடத்தையோ அல்லது ஒரு மேஜையின் இருப்பிடத்தையோ உறுதி படுத்திக்கொள்வேன். ஒருமுறை அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் மலையைக் குடைந்துகொண்டிருந்த அதிர்வின் பீதியில், கச்சிதமாக டேபிலின் அடியில் உட்காரமுடிகிறதா என்று ஒத்திகைப்பார்த்துக்கொண்டேன்.
ரயில் அதிர்வுகள் என்னை ஒன்றும் செய்ததுகிடையாது. நான் மனநோயாளி இல்லை என்பதை உணர்ந்துகொண்டதே ரயில் பயணங்களில்தான். மனஅதிர்வை கணித்து முன் எச்சரிக்கையாக ஒளிந்துகொண்டு தப்பித்துக்கொள்ளும் ஃபோபியாக்களை எப்படி வரவைத்துக்கொள்வது ?

No comments:

Post a Comment