Monday, October 10, 2016

ரேஷ்மி என் பால்யகால சினேகிதி

நானும் ரேஷ்மியும்
பால்யகாலத்து சினேகிதர்கள்.
அவள் உச்சுக்குடுமியும்,
குட்டைப் பாவாடையும்
அணிந்து வந்த காலத்தில்
அழி்ப்பான்களில்
அஞ்சு கல் விளையாடியதைத்
தவிற வேறு ஒன்றுமே
நினைவில்லை எனக்கு.

கொஞ்சம் அலசினால்
புருவத்திற்கும், நெற்றிக்கும்
கருத்த "மை" வைத்த
எலுமிச்சை நிற முகம்
மட்டும் மங்களாக
நினைவில் வந்துபோகும்.

14 வருடங்களாக "ரேஷ்மி"
ஒரு பெயராக என்னுடனேயேதான்
இருந்திருக்கிறாள்.
அவள் சாயலில்
பலமுறை பலரைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு முறை ஒருவனுடன் பைக்கில்,
மற்றொரு முறை ஒரு திரையரங்கில்,
ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தில்,
சில  நிகழ்ச்சியில்,
சில முறை என் நண்பனின் கைப்பேசியில்,
சில் முறை யாரோ ஒருத்தியின்
குரலில்.

பிரியங்காவும், லதாவும்
ரேஷ்மியை மாதிரி நினைவில்
இருந்ததேயில்லை,
பிரியங்காவையும், லதாவையும்
கடந்து சென்றதைப் போல
ஒரு முறைகூட ரேஷ்மி என்னும்
பெயரை கடந்ததில்லை.

பின்னர் ஒரு வாட்ஸாப் குரூப்பின்
வாயிலாக தொடங்கப்பட்ட கான்வர்சேஷனில்,
மீண்டும் நுழைகிறாள்
ஆவியின் ஆகிருதியாக.

இப்போது
ரேஷ்மியிடம்
பேசிக்கொண்டுதானிருக்கிறேன்.
ரேஷ்மியை
பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன்.

ரேஷ்மியை பார்த்ததில்லை,
ரேஷ்மியிடம் பேசியதில்லை.
சினேகிதிகளில் இவள்
ஒரு ரகம்,
ஒரு வகை.

ஆழ்கடல் சிப்பிக்கள் முத்தை எப்பொழுதும் துப்புவதில்லை.

No comments:

Post a Comment