Tuesday, September 20, 2016

மாலதியின் கடைசி நாட்கள்


தன் நீங்கா வலிக்கு
மருத்துவம் பார்த்து
கேன்சரோடு திரும்பிய
மாலதியின் கடைசி
நாட்கள்

கீமோ இருக்கு மாலதி
கல்லைக்கூட கரைக்கும்
என்ன.....
முடி கொட்டும்
மொட்டை அடித்துக்கொள்
மூட்டு வலிக்கும்
படுக்கையில் படுத்துக்கொள்
உணவு வேண்டாம்
மாத்திரை விழுங்கிக்கொள்
3 நாளில் கேன்சர் கரையும்
மூத்திரம் முழுக்க மஞ்சளாய்ப் போகும்

அய்யோ அம்மா...
இரத்தம் இரத்தம்.....
கண்ணங்கள் ஒட்டி
நடை தளர்ந்து
டாக்டர் கை பிடித்து
கரைந்ததா என்கிறாள்.

நிதானம் மாலதி
வயிற்றில் கரைந்து,
அடிவயிற்றில் பரவுது
தண்ணீர் கொல்லாது,
தூக்கம் வராது,
எப்படியாவது
மாத்திரையை மட்டும்
திண்றிடு தீர்த்திடு
அடுத்த கீமோவில்
கண்டிப்பாய் ஒழித்திடலாம் என்கிறார்.

வலி வலி வலி வலி
வலி வலி வலி வலி
பேச்சும் வலி
மூச்சும் வலி
படுக்கையில் விழித்தாள்
சுற்றி சொந்தங்கள்
அழுகிறாள் அழுகிறாள்
அழுகிறாள் அழுகிறாள்
அழுகிறாள் சிரிக்கிறாள்

ஒரு நபருடனான கடைசி சந்திப்பு
எப்படியெல்லாம் நிகழக்கூடாது
என்று நினைத்தாளோ,
அதுவெல்லாம் நிகழ்கிறது.

"மாலதி தைரியமாக சாவு
பிள்ளைகளை நன்றாய் வளர்த்திருக்கிறாய்
பிழைத்துக்கொள்வார்கள்"

அவளுக்கான ஆறுதல்களை
நினைத்து நினைத்தே
அழுதாள் அழுதாள்
அழுதாள் சிரித்தாள்
சிரித்தாள்
இறந்தாள்........

No comments:

Post a Comment